|
Original Key: D - 3/4 |
D F#m
பலிபீடத்தில் என்னைப் பரனே
D A
படைக்கிறேனே இந்த வேளை
G
அடியேனை திருச்சித்தம் போல
A A7 D
ஆண்டு நடத்திடுவீர்
.
D Bm A
கல்வாரியீன் அன்பினையே
G A D
கண்டு விரைந்தோடி வந்தேன்
D Bm A
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
G A D
கரை நீங்க இருதயத்தை
.
1.நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்து உமக்காய் நிறுத்தி - கல்வாரியீன்
.
2.ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் - கல்வாரியீன்
.
3.சுயம் என்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர் - கல்வாரியீன்
.
4.பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் - கல்வாரியீன்

